காங்கிரஸில் 'கரைந்த' சிரஞ்சீவி கட்சி!


ஹைதராபாத்: இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த பிரஜா ராஜ்யம் – காங்கிரஸ் இணைப்பு நேற்று முறைப்படி முடிந்தது.

நடிகர் சிரஞ்சீவி, 3 ஆண்டுகளுக்கு முன் பிரஜா ராஜ்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். உடனடியாக தேர்தலில் போட்டியிட்டார். ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் அந்த கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடந்த பிப்ரவரி மாதம் சிரஞ்சீவி சந்தித்து பேசினார். பின்னர் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரசுடன், பிரஜா ராஜ்யம் கட்சியை இணைக்கும் விழா ஹைதராபாத்தில் நேற்று முறைப்படி நடந்தது. இந்த விழாவில் சிரஞ்சீவி தனது கட்சியை அதிகாரபூர்வமாக காங்கிரசுடன் இணைத்துக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசுகையில், “காங்கிரசுடன் கட்சியை இணைத்துக்கொண்டாலும், நான் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணியை தொடர்ந்து மேற்கொள்வேன். ஆந்திராவை மகிழ்ச்சிகரமான மாநிலமாக ஆக்க முயற்சிகளை மேற்கொள்வேன்” என்றார்.

இணைப்பு விழா நடந்துவிட்டதால், ஆந்திர அமைச்சரவையிலும் மாநில காங்கிரஸ் கமிட்டியிலும் சிரஞ்சீவிக்கு பதவிகள் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

 
 
 

Label

Label

Labels