காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!

6/10/2011 3:07:17 PM

பிரியாமணி கூறியது: பிருத்விராஜுடன் எனக்கு காதல் என்று கிசுகிசு வந்தது. அவரது திருமணத்துக்கு பிறகு அந்த கிசுகிசு ஓய்ந்தது. அதே வேகத்தில் தெலுங்கு ஹீரோ சுமந்துடன் காதல் என்று கிளப்பி விட்டார்கள். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவரைப் பற்றி என் குடும்பத்தினருக்கு நன்கு தெரியும். எங்களுக்குள் ரொமான்ஸ¢ இல்லை. காதலும், கல்யாணமும் எனக்காக காத்திருக்கிறது. எனக்குகேற்ற காதலனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே திருமணம் என்பது நீண்ட நாள் கழித்தே நடக்கும். நடிப்பில்தான் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் என்னை படம் இயக்கும்படி நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள். அதற்கு நிறைய கற்க வேண்டும், நிறைய அனுபவம் வேண்டும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான். முதலில் இதில் ஒரு நிறைவு கிடைக்கட்டும், அதன்பிறகு இயக்குவது பற்றி சிந்திப்பேன். கேமராவுக்கு பின்னால் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் படம் இயக்குவேன்.

 
 
 

Label

Label

Labels