டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினி : சிங்கப்பூரில் சில வாரங்கள் ஓய்வு எடுக்க முடிவு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினி : சிங்கப்பூரில் சில வாரங்கள் ஓய்வு எடுக்க முடிவு!

6/15/2011 3:36:12 PM

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர்  ரஜினிகாந்த் இன்று  டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் ஆனாலும், சிங்கப்பூரில் சில வாரங்கள் ஓய்வு எடுப்பார் என்றும், அடுத்த மாதம் சென்னை திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜூலை இரண்டாவது வாரம் சென்னை திரும்புகிறார். இதற்கிடையே, ரஜினியை வரவேற்க இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.

சில மாதங்களுக்கு முன், 'ராணா' பட ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ரஜினிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு வீடு திரும்பினார். சில நாட்களில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற, கடந்த மாதம் 27ம் தேதி சென்றார் ரஜினி. அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த தற்போது பூரண குணமடைந்து விட்டார்.

டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் சூப்பர் ஸ்டார் உடல்நலம் தேறியுள்ளார்.

ரசிகர்களை எப்போது சந்திக்கிறார் ரஜினி?

இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின், ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேச ரஜினி ஆர்வமாக இருகப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், விரைவில் அவர் ரசிகர்களை நேரடியாக சந்தித்து, அவர்களின்(ரசிகர்களின்) அன்பிற்கு நன்றி தெரிவிப்பார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 
 
 

Label

Label

Labels