போராளி தனிமனிதனின் கதை: சசிகுமார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போராளி தனிமனிதனின் கதை: சசிகுமார்

6/15/2011 12:51:57 PM

தனிமனிதனின் போராட்டத்தைச் சொல்லும் படமாக, 'போராளி' உருவாகிறது என்று சசிகுமார் கூறினார். சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படம் 'போராளி'. இதில் 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதி, வசுந்தரா, நிவேதா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மேலும் அல்லரி நரேஷ், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கிறார்கள். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர் சி. பாபு இசை அமைக்கிறார். சென்னை குரோம்பேட்டையில் செட் அமைத்து இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படம் பற்றி சசிகுமார் கூறியதாவது:

இது புரட்சிகர கதை இல்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்துக்காகப் போராட வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் 'போராளி' என்ற தலைப்பு வைத்துள்ளோம். இதன் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்லரி நரேஷை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறோம். மூன்று ஹீரோயின்கள் தேவையா என்கிறார்கள். இந்த கதைக்கு தேவையாக இருந்தது. அதனால் தேர்வு செய்தோம். இதில் நடிக்கும் நிவேதா மலையாளத்தில் நடித்து வருகிறார். இவரை, குழந்தை நட்சத்திரமாக, தான் இயக்கிய டி.வி தொடரில் அறிமுகப்படுத்தியவர் சமுத்திரக்கனி. அவரே இப்போது நிவேதாவை தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக்குகிறார். படத்தின் கதைப்படி முதல்பாதி வரை அதிக தலைமுடியுடன் வருவேன். இரண்டாம் பாதியில் கதை நகரத்துக்கு வந்ததும் வேறு கெட்டப்பில் வருவேன். அதற்காக அதிகமாக வளர்த்த முடியை, இப்போது வெட்டிவிட்டேன். முதல்கட்ட படப்பிடிப்பு தேனியில் நடந்தது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இவ்வாறு சசிகுமார் கூறினார்.

 
 
 

Label

Label

Labels